கோவில் 1557 - வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவில்

🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1557

செல்வம் பெருக அருளும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவில்

12.09.2025 வெள்ளி


அருள்மிகு சின்னமலை சிங்காரவேலன் திருக்கோவில்

செமப்பட்டரை

ஆலங்கநேரி 632203

[Alanganeri]

கே.வி.குப்பம் வட்டம்

வேலூர் மாவட்டம்


இருப்பிடம்: வேலூர் பேருந்து நிலையம் 22 கிமீ, மேல்மாயில் மயிலாடும் மலை சக்திவேல் முருகன் கோவில் 5 கிமீ, கே.வி.குப்பம் 6 கிமீ, குடியாத்தம் 20 கிமீ, சென்னை கோயம்பேடு 154 கிமீ


மூலவர்: சிங்காரவேலன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சிங்காரவேலன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவில் இருக்கும் கே.வி.குப்பம் வட்டம் ஆலங்கநேரி கிராமத்தில் செல்வம் பெருக அருளும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மிகவும் புகழ் பெற்ற மேல்மாயில் மயிலாடும் மலை சக்திவேல் முருகன் கோவிலிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கே.வி.குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 154 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிங்காரவேலன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவிலில் ஆடிக்கிருத்திகை முக்கிய திருவிழாவாக விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் தைக்கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

பிரசித்திப் பெற்ற வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவில் மகா கும்பாபிஷேகம் சமீபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன் கோவில் அழகிய கோவிலாக சிறிய மலை மீது அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சிங்காரவேலன் வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேலன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, திருமண வரமருள, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் விலக, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, மன மகிழ்ச்சி உண்டாக, சஞ்சலங்கள் அகல, தோஷங்கள் விலக, வாழ்வில் ஜெயம் உண்டாக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திருமண வரமருளும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலனை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼


படம் 1 - 1557 செல்வம் பெருக அருளும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன்


படம் 2 - 1557 திருமண வரமருளும் வேலூர் ஆலங்கநேரி சின்னமலை சிங்காரவேலன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்