கோவில் 1556 - ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1556
வேண்டிய வரங்கள் தந்தருளும் ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவில்
11.09.2025 வியாழன்
அருள்மிகு செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோவில்
வில்வநாதபுரம்
கல்மேல்குப்பம் PO 632501
ராணிப்பேட்டை மாவட்டம்
இருப்பிடம்: ராணிப்பேட்டை பேருந்து நிலையம் 14 கிமீ, வாலாஜாபேட்டை 12 கிமீ, ஆற்காடு 16 கிமீ, வேலூர் 27 கிமீ, சென்னை கோயம்பேடு 113 கிமீ
மூலவர்: குழந்தை வேலன்
உற்சவர்: குழந்தை வேலன்
தல மகிமை:
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் வில்வநாதபுரம் பகுதியில் உள்ள செட்டிமலையில் வேண்டிய வரங்கள் தந்தருளும் ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவில் அமைந்துள்ளது. வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 113 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் குழந்தை வேலன் அழகு பாலகனாக அபய கரம் நீட்டி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. மேலும் தைக்கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
அழகிய படிக்கட்டு வசதிகளுடன் கூடிய ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் கோவில் அழகிய, சிறிய ஆனால் சாநித்தியம் மிக்க கோவிலாகும் இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் குழந்தை வேலன், அழகு பாலகனாக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் குழந்தை வேலன் வலது திருக்கரம் அபய கரம் காட்டியும், இடது திருக்கரம் அழகாக இடுப்பில் வைத்தப்படியும் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்உள்ளிட்ட அனைத்து தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி
பிரார்த்தனை:
வேண்டிய வரங்கள் பெற்றிட, மற்றும் குழந்தை வரம் அருள, மனத் துயரங்கள் நீங்க, நோய்கள் குணமாக, நல்லன அருள, கல்வி சிறக்க, தொழில் விருத்தியடைய, வினைகள் விலக, பிணிகள் போக்க, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
குழந்தை வரம் அருளும் ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருவடிகள் போற்றி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1556 வேண்டிய வரங்கள் தந்தருளும் ராணிப்பேட்டை வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன்
Comments
Post a Comment