கோவில் 1555 - திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1555

வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில்

10.09.2025 புதன்


அருள்மிகு குன்றில் விளையாடும் குமரன் திருக்கோவில் [TM024216]

V.O.C நகர்

பவழகுண்டூர்

திருவண்ணாமலை 606603

திருவண்ணாமலை மாவட்டம்


இருப்பிடம்: திருவண்ணாமலை பேருந்து நிலையம் 3 கிமீ, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 1 கிமீ, திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் 1 கிமீ, விழுப்புரம் 67 கிமீ, திண்டிவனம் 72 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் 160 கிமீ


மூலவர்: குன்றில் விளையாடும் குமரன்

உற்சவர்: குமரன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திருவண்ணாமலை மாநகரம் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் திருவண்ணாமலை V.O.C நகரில் (ரமணாஸ்ரமம் அருகில்) வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது சிறப்புப் பெற்ற திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 72 கிமீ தொலைவு அல்லது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 160 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் குன்றில் விளையாடும் குமரன் கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை மிகவும் முக்கிய திருவிழாவாக விமரிசையாக நடைபெறுகின்றது. தைக்கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் வரும் ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கும் வந்து குன்றில் விளையாடும் குமரனை வழிபட்டு செல்கின்றனர்.


தல வரலாறு:

மிகவும் தொன்மையான திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில் படிக்கட்டு வசதிகளுடன் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் குன்றில் விளையாடும் குமரன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத குமரன், விநாயகர், இடும்பன், சிவபெருமான், அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி


பிரார்த்தனை:

வினைகள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, கேட்டது கிடைக்க, பிணிகள் நீங்க, திருமணப்பேறு, குழந்தைப்பேறு கிட்ட, கல்வி, கலை சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, விவசாயம் செழிக்க, நல்லன வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, கவலைகள் அகல, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-11 மாலை 5-8


நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரனை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼


படம் 1 - 1555 வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன்



படம் 2 - 1555 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் திருவண்ணாமலை V.O.C நகர் குன்றில் விளையாடும் குமரன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்