கோவில் 1554 - திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1554
மங்கல வாழ்வு அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவில்
9.09.2025 செவ்வாய்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM024269]
கிரிவலப்பாதை
குமார கோவில் தெரு
பவழகுண்டூர்
திருவண்ணாமலை 606601
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: திருவண்ணாமலை பேருந்து நிலையம் 2.5 கிமீ, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 1 கிமீ, விழுப்புரம் 66 கிமீ, திண்டிவனம் 74 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் 161 கிமீ
மூலவர்: குமரன் [சுப்பிரமணியர்]
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: குமரன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருவண்ணாமலை மாநகரம் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவில் இருக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஆரம்பத்தில் உள்ள பவழகுண்டூர் குமார கோவில் தெருவில் மங்கல வாழ்வு அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவில் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 74 கிமீ தொலைவு அல்லது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 161 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் குமரன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் திருக்கோவில் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மூலவர் அருள்மிகு குமரன் அல்லது அருள்மிகு சுப்ரமணியசுவாமி என்று அழைக்கப்படுகிறார். திருவண்ணாமலை நகரின் ஆண்டின் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான திருவூடல் திருவிழா அன்று இறுதியில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் இத்திருக்கோவிலுக்கு வந்து தங்கியிருப்பார் மறுநாள் காலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் இத்திருக்கோவிலுக்கு வந்து அருள்மிகு உண்ணாமுலையம்மனை சமாதானம் செய்து கிரிவலம் செல்வது சிறப்பான ஒரு விஷேசம் ஆகும். இக்கோவிலுக்கு அருகில் மிகவும் சிறப்புப் பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அண்ணாமலையார் கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா போல சிறப்பாக நடைபெறும். திருக்கார்த்திகை தீபத்திருநாளில் கிரிவலம் வரும் பல லட்சகணக்காண பக்தர்கள் இந்த குமரன் கோவிலுக்கும் வந்து குமரனை வழிபட்டு, நற்பலன்களை பெற்றுச் செல்வர். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் வரும் ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கும் வந்து குமரனை வழிபட்டு செல்கின்றனர்.
தல வரலாறு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது. இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன் கோவில் ஆகம விதிகளின் அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத குமரன் மயில் பின் நிற்க, கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் குமரன் வலது திருக்கரம் அபயகரம் நீட்டி அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. கருவறை வாசல் இருபுறமும் விநாயகர் மற்றும் ஐய்யப்பன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத குமரன், குபேர விநாயகர், இடும்பன், வீரபாகு, பைரவர் (மூவரும் ஒரே சந்நிதி) உள்ளிட்ட தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு அருள, மன அமைதி பெற, வினைகள் விலக, பிணிகள் தீர, திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, துன்பங்கள் போக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 4.30-8
மன அமைதி தரும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1554 மங்கல வாழ்வு அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பவழகுண்டூர் குமரன்
Comments
Post a Comment