கோவில் 1553 - கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1553
இகபர சுகமருளும் கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவில்
8.09.2025 திங்கள்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM009880]
அன்னமட வீதி
சூலூர்
கோயம்புத்தூர் 641016
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 20 கிமீ, சிங்காநல்லூர் 12 கிமீ, பல்லடம் 19 கிமீ, உக்கடம் 19 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 20 கிமீ, போத்தனூர் 20 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: பழனியாண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் சூலூர் நகரில் அன்னமட வீதியில் இகபர சுகமருளும் கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சிங்காநல்லூரிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். மூலவர் பழனியாண்டவர் பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றனர்.
கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இது போல வருடந்தோறும் சூலூர் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். பழனியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும். அதிக அளவில் பக்தர்கள் பழனி ஆண்டவரை வழிபட்டு, பலன் பெற்று செல்கின்றனர். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய எல்லா திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது..
தல அமைப்பு:
கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் கோவில் ஆகம விதிகளின் படி பொலிவாக அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனியாண்டவர் கருணை பொங்க அழகு பாலகனாக கையில் தண்டம் ஏந்தி திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பழனியாண்டவர் வேலுடனும், வலது திருக்கரம் அபயகரம் நீட்டியும் இடது திருக்கரம் இடுப்பில் ஒயிலாக வைத்தப்படியும் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் நாகர்களுடன் விநாயகர், உற்சவர் பழனியாண்டவர் உள்ளிட்ட அனைத்து மூர்த்தங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, கர்ம வினைகள் நீக்க, விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, திருமண வரம் கிட்ட, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, சஞ்சலங்கள் தீர, மன மகிழ்ச்சி கிடைத்திட, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கர்ம வினைகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவரை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 1553 இகபர சுகமருளும் கோயம்புத்தூர் சூலூர் பழனியாண்டவர் (தைப்பூசம் அலங்காரம்)
Comments
Post a Comment