கோவில் 1552 - கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவில் -
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1552
தடைகளை நீக்கும் கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவில்
7.09.2025 ஞாயிறு
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில்
கஜலட்சுமி நகர்
பட்டணம்புதூர்
சூலூர் வட்டம்
கோயம்புத்தூர் 641016
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 16 கிமீ, சிங்காநல்லூர் 7 கிமீ, சூலூர் 9 கிமீ, போத்தனூர் 12 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 14 கிமீ, உக்கடம் 15 கிமீ, பல்லடம் 28 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவில் இருக்கும் சூலூர் வட்டம் பட்டணம்புதூர் பகுதியில் கஜலட்சுமி நகரில் தடைகளை நீக்கும் கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சிங்காநல்லூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சூலூரிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். மூலவர் பழனியாண்டவர் பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றனர்.
கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய எல்லா திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர் கோவில் கருவறையில் மூலவர் பழனியாண்டவர் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பழனியாண்டவர் வேலுடனும், வலது திருக்கரம் அபயகரம் நீட்டியும் இடது திருக்கரம் இடுப்பில் ஒயிலாக வைத்தப்படியும் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
தடைகள் நீங்க, நல்லன அருள, வேண்டியவை கிடைக்க, வல்வினைகள் தீர, பிணிகள் நீங்க, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன நிம்மதி கிடைக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4-8
நல்லன அருளும் கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவரை மனமுருகி வேண்டிக் கொள்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 1552 தடைகளை நீக்கும் கோயம்புத்தூர் பட்டணம்புதூர் பழனியாண்டவர்
Comments
Post a Comment