கோவில் 1551 - கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1551

சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

6.09.2025 சனி


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

கஞ்சிகோணம்பாளையம்

கோயம்புத்தூர் 641111

மதுரை மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 16 கிமீ, வெள்ளலூர் 4 கிமீ, சிங்காநல்லூர் 7 கிமீ, போத்தனூர் 7 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 13 கிமீ, உக்கடம் 14 கிமீ, சூலூர் 14 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவில் இருக்கும் கஞ்சிகோணம்பாளையத்தில் சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளலூரிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது சூலூரிலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். பழனி ஆண்டவர் இத்திருக்கோவிலில் மூலவராக கையில் தண்டத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.


கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் மிக விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் வெள்ளலூர், சிங்காநல்லூர் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் வலது கையில் தண்டத்துடன் பழனி முருகனை போலவே ஞானம் பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பழனி ஆண்டவர் இடது திருக்கரம் இடுப்பில் வைத்தப்படி அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், இடும்பன், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சங்கடம் தீர, விருப்பங்கள் நிறைவேற, ஞானம் மேம்பட, தொழில், வியாபாரம் சிறக்க, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் கிட்ட, திருமண பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன அமைதி பெற, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-8


விருப்பங்களை நிறைவேற்றும் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர் திருப்பாதங்களை பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1551 சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர்


படம் 2 - 1551 விருப்பங்களை நிறைவேற்றும் கோயம்புத்தூர் கஞ்சிகோணம்பாளையம் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்