கோவில் 1549 - கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1549
பிணிகள் தீர்க்கும் கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவில்
4.09.2025 வியாழன்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM011401]
செலம்பனூர் 642123
தொண்டாமுத்தூர் வட்டாரம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 24 கிமீ, தொண்டாமுத்தூர் 7 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 17 கிமீ, உக்கடம் 25 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 26 கிமீ, சிங்காநல்லூர் 31 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் தொண்டாமுத்தூர் வட்டாரம் செலம்பனூரில் பிணிகள் தீர்க்கும் கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் தொண்டாமுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 31 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் பழனியாண்டவர் மூலவராக வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் பழனி திருத்தல தண்டாயுதபாணியை போலவே வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், இடும்பன் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பிணிகள் தீர, செல்வ வளம் பெருக, வினைகள் நீங்க, வேண்டுவன கிடைக்க, நல்லன அருள, சந்தான பிராப்தி உண்டாக, நோய்கள் குணமாக, மன நிம்மதி கிடைக்க, கல்வி சிறக்க, வியாபாரம், தொழில் விருத்தியடைய, விவசாயம் செழிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாகை 5.30-8
செல்வ வளம் பெருக அருளும் கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவரை மனமுருக வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1549 பிணிகள் தீர்க்கும் கோயம்புத்தூர் செலம்பனூர் பழனியாண்டவர் கோவில்
Comments
Post a Comment