கோவில் 1548 - கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1548

ஞானம் மேம்பட அருளும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

3.09.2025 புதன்


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

கொண்டயம்பாளையம் 641109

தொண்டாமுத்தூர் வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 24 கிமீ, தொண்டாமுத்தூர் 5 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 13 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 20 கிமீ, உக்கடம் 20 கிமீ, சிங்காநல்லூர் 27 கிமீ,


மூலவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் தொண்டாமுத்தூர் வட்டம் கொண்டயம்பாளையத்தில் ஞானம் மேம்பட அருளும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் தொண்டாமுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 27 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் பழனி தண்டாயுதபாணியை போலவே சாநித்யத்துடன் அருள்பாலிக்கின்றார்.


கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம், வருடந்தோறும் முக்கிய திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. 90 வருடங்களாக பழனி திருத்தல ஆண்டவரை தரிசிக்க இத்திருக்கோவிலிலிருந்து ஏராளாமான பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து பக்தியுடன் பாதயாத்திரையாக செல்கின்றனர் என்பது சிறப்பு செய்தி. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலாகும்

தல அமைப்பு:

கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர் திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் பழனி திருத்தல தண்டாயுதபாணியை போலவே வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், சிவபெருமான், உமையம்மை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் சங்கடஹர சதுர்த்தி


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட, நினைத்தது நிறைவேற, நல்லன அருள, வினைகள் அகல, பிணிகள் தீர, குழந்தைப்பேறு வேண்டி, தொழில் விருத்தியடைய, சஞ்சலங்கள் போக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, தீய எண்ணங்கள் மறைய, தோஷங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நினைத்ததை நிறைவேற்றும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவரை போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1548 ஞானம் மேம்பட அருளும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர்


படம் 2 - 1548 நினைத்ததை நிறைவேற்றும் கோயம்புத்தூர் கொண்டயம்பாளையம் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்