கோவில் 1547 - கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏽🙏🏽

தினம் ஒரு முருகன் ஆலயம்-1547

மன அமைதி கிடைக்க அருளும் கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

2.09.2025 செவ்வாய்


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

கிட்டாம்பாளையம் 641659

சூலுர் வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 32 கிமீ, சூலுர் 21 கிமீ, சிங்காநல்லூர் 28 கிமீ, பல்லடம் 28 கிமீ, உக்கடம் 36 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவில் இருக்கும் சூலுர் வட்டம் கிட்டாம்பாளையத்தில் மன அமைதி கிடைக்கும் கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சூலுர் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது பல்லடம் நகரிலிருந்து தொலைவு அல்லது 28 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கிட்டாம்பாளையம் தெய்வீக சக்தி வாய்ந்த பழனி ஆண்டவர் அபயக்கரம் நீட்டி அருளாட்சி புரிகின்றார். இந்த கோவில் சுவாமி ஆசிப்பெற்ற பஞ்சாமிர்தத்திற்கு சிறப்புப் பெற்றது.



கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் திருவிழாவாக கோலாகலமாக நடைபெறுகிறது. திருக்கார்த்திகையின் போது தீபஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர் விட்டு எரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். கந்த சஷ்டி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று சூர சம்ஹாரம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. பொங்கல், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மார்கழி மாத பஜனைகள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.

தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் ஆகம விதிப்படிகளின் படி அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்துக்கே உரிய அழகிய தீப்ஸ்தம்பம் கோவிலின் அழகைக் கூட்டுகிறது. விநாயகர், ஸ்தம்பத்தில் முருகப்பெருமான், வேல் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பொலிவான பழனி ஆண்டவர் பெருங்கருணையுடன் கையில் வேலுடன் நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், உமையம்மை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா முக்கிய தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கார்த்திகை தீபம் (திருக்கார்த்திகை),கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, பொங்கல், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மார்கழி மாத பஜனைகள், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் சங்கடஹர சதுர்த்தி


பிரார்த்தனை:

மன அமைதி கிடைக்க, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, கல்வி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, வினைகள் விலக, பிணிகள் போக்க, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, உடல்நிலை சீராக, நல்லன உண்டாக, கவலைகள் தீர, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை அதிர்வுகள் உண்டாக அருளும் கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் திருப்பாதங்கள் பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏽🙏🏽


படம் 1 - 1547 மன அமைதி கிடைக்க அருளும் கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர்


படம் 2 - 1547 நேர்மறை அதிர்வுகள் உண்டாக அருளும் கோயம்புத்தூர் கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்