கோவில் 1546 - கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகன் கோவில்
🙏🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1546
பாவங்கள் நீக்கும் கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகன் கோவில்
1.09.2025 திங்கள்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
[அ/மி சக்தி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில்]
சித்தாபுதூர்
கோயம்புத்தூர் 641044
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 1 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 4 கிமீ, உக்கடம் 6 கிமீ, பீளமேடு 7 கிமீ, சிங்காநல்லூர் 8 கிமீ, போத்தனூர் 11 கிமீ
மூலவர்: பாலமுருகன்
மூலவர் 2: சக்தி விநாயகர்
உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் இருக்கும் சித்தாபுதூரில் பாவங்கள் நீக்கும் கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பீளமேட்டிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 11 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக பாலமுருகன் அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகன் கோவிலில் மற்றொரு மூலவராக சக்தி விநாயகர் அருள்புரிவதால் இத்திருக்கோவில் கோயம்புத்தூர் சித்தாபுதூர் சக்தி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. சித்தாபுதூரில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் அருகில் உள்ளது சிறப்பம்சமாகும்.
கோயம்புத்தூர் சித்தாபுதூர் சக்தி விநாயகர், பாலமுருகன் கோவிலில்
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும்
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் சித்தாபுதூர் சக்தி விநாயகர், பாலமுருகன் கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்க கோவிலாகும்
தல அமைப்பு:
கோயம்புத்தூர் சித்தாபுதூர் திருக்கோவில் கருவறையில் மூலவர் அழகான பாலமுருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் மற்றொரு மூலவர் சக்தி விநாயகர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
பாவங்கள் நீங்க, வேண்டுவன தர, வினைகள் நீங்க, பிணிகள் விலக, சந்தான பாக்கியம் கிட்ட, நோய்கள் தீர, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டுவன தந்தருளும் கோயம்புத்தூர் சித்தாபுதூர் பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment