கோவில் 1537 - கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1537
செல்வ வளம் பெருக அருளும் கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவில்
23.08.2025 சனி
அருள்மிகு செல்வமுத்துக்குமார சுவாமி திருக்கோவில்
கோணவாய்க்கால்பாளையம்
போத்தனூர்
கோயம்புத்தூர் 641023
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 12 கிமீ, போத்தனூர் 2 கிமீ, சிங்காநல்லூர் 8 கிமீ, உக்கடம் 8 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 9 கிமீ, மலுமிச்சம்பட்டி 10 கிமீ, மதுக்கரை 12 கிமீ, பொள்ளாச்சி 38 கிமீ
மூலவர்: செல்வமுத்துக்குமார சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: செல்வமுத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் கோணவாய்க்கால்பாளையத்தில் செல்வ வளம் பெருக அருளும் கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் போத்தனூரிலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது மலுமிச்சம்பட்டியிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மதுக்கரையிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி நகரிலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் செல்வமுத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவில் போத்தனுர் சுற்று வட்டாரத்தில் ஒரு முக்கிய திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் செல்வமுத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், பொலிவான உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுத்துக்குமார சுவாமி, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வ வளம் பெருக, சஞ்சலங்கள் தீர, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழ்ந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் நலன் சீராக, நல்லன நடக்க, மன மகிழ்ச்சி கிட்ட, வாழ்வில் வளம் பெற, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 5-8
சஞ்சலங்கள் தீர்க்கும் கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமியை மனமுருக வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1537 செல்வ வளம் பெருக அருளும் கோயம்புத்தூர் கோணவாய்க்கால்பாளையம் செல்வமுத்துக்குமார சுவாமி
Comments
Post a Comment