கோவில் 1534 - கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1534
வேண்டியதை தந்தருளும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவில்
20.08.2025 புதன்
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோவில்
பச்சாபாளையம்
மதுக்கரை PO
கோயம்புத்தூர் 641105
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 25 கிமீ, மதுக்கரை 10 கிமீ, மலுமிச்சம்பட்டி 10 கிமீ, உக்கடம் 21 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 22 கிமீ
மூலவர்: வெற்றிவேல் முருகன்
உற்சவர்: வெற்றிவேல் முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் பச்சாபாளையத்தில் வேண்டியதை தந்தருளும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மதுக்கரை பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மலுமிச்சம்பட்டியிலிருந்து (மலுமிச்சைபட்டி) 10 கிமீ தொலைவு அல்லது உக்கடத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவில் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வெற்றிவேல் முருகன் மூலவராக கையில் வேலுடன் அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள் முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை முதலான முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் கோவில் மதுக்கரை பகுதியில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும். . .
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் வெற்றிவேல் முருகன் திருக்கரங்களில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி நின்ற திருக்கோலத்தில் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத வெற்றிவேல் முருகன் (உற்சவர்) உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டியதை தந்தருள, வாழ்வில் ஏற்றம் பெற, வினைகள் விலக, பிணிகள் நீங்க, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, நல்லன அருள, மன நிம்மதி கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி, சண்டை, சச்சரவுகள் போக்கிட, தோஷங்கள் அகன்றிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வாழ்வில் ஏற்றம் தரும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன் தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1534 வேண்டியதை தந்தருளும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன்
படம் 2 - 1534 வாழ்வில் ஏற்றம் தரும் கோயம்புத்தூர் பச்சாபாளையம் வெற்றிவேல் முருகன்
Comments
Post a Comment