கோவில் 1533 - கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1533
கேட்ட வரங்கள் அளிக்கும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்
19.08.2025 செவ்வாய்
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
கள்ளிப்பாளையம்
கோயம்புத்தூர் 641107
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 17 கிமீ, கணுவாய் 5 கிமீ, துடியலூர் 7 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 15 கிமீ, மேட்டுப்பாளையம் 33 கிமீ
மூலவர்: பழனி ஆண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் கள்ளிப்பாளையம் பகுதியில் கேட்ட வரங்கள் அளிக்கும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. கணுவாய் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது துடியலூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி பழனி முருகனை போல பேராற்றலுடன் அருளாட்சி புரிகின்றார்.
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பழனிக்கு பக்தர்கள் எடுத்து செல்வது இத்திருக்கோவிலின் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை முதலான முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் இப்பகுதியில் பழமையான, பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். . .
தல அமைப்பு:
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் அழகிய கோபுரங்கள், தீபஸ்தம்பம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் பழனி தண்டாயுதபாணியை போலவே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவில் மூலவர் பழனி ஆண்டவர் ராஜ அலங்கார திருக்கோலத்தில் இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து இருப்பது கண்கொள்ளா திருக்காட்சியாகும். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்ட வரங்கள் கிடைக்க, செல்வ வளம் பெருக, குழந்தை செல்வம் வேண்டி, திருமணம் நடைபெற, குடும்ப வாழ்வு சிறக்க, கல்வி, ஞானம் செழிக்க, தொழில், வியாபாரம் மேம்பட, விவசாயம் விருத்தியடைய, நல்லன அருள, தடைகள் நீங்க, மன மகிழ்ச்சி கிட்ட, வினைகள் விலக, பிணிகள் போக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 6-7.30
செல்வ வளம் பெருக அருளும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1533 கேட்ட வரங்கள் அளிக்கும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனி ஆண்டவர்
Comments
Post a Comment