கோவில் 1532 - கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1532
குறைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவில்
18.08.2025 ஞாயிறு
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
ஒத்தக்கால்மண்டபம்
கோயம்புத்தூர் 641032
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 21 கிமீ, உக்கடம் 18 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 19 கிமீ, சிங்காநல்லூர் 21 கிமீ, பொள்ளாச்சி 37 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் இருக்கும் ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவிலை அடையலாம். மூலவர் பாலமுருகன் இத்திருக்கோவிலில் கையில் வேலேந்தி அருளாட்சி செய்கின்றார்.
கந்த சஷ்டி பெருவிழா கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவிலில் ஆறு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆறு நாட்களும் சுவாமிக்கு அனைத்து அபிஷேகங்கள், மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு மற்றும் .7-ம் நாள் சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, வேண்டும் வரங்களை பெற்று செல்கின்றனர். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு.
தல வரலாறு:
கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவில் இப்பகுதியில் வாழும் புரவலர்கள் மற்றும் பக்தர்கள் பொருளுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. . .
தல அமைப்பு:
கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன் கோவில் அழகிய அமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் பாலகனாக திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலான தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
குறைகள் தீர, குழந்தை பாக்கியம் வேண்டி, வினைகள் விலக, பிணிகள் நீங்க, திருமணம் நடைபெற, கல்வி, ஞானம் சிறக்க, வேண்டியது கிடைக்க, நோய்கள் சரியாக, மன மகிழ்ச்சி உண்டாக, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
குழந்தை பாக்கியம் தந்தருளும் கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1532 குறைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பாலமுருகன்
Comments
Post a Comment