கோவில் 1530 - கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1530
மன மகிழ்ச்சி தந்தருளும் கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் கோவில்
16.08.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
ஜி கே ஆர் நகர் (G K R Nagar)
சிவில் ஏரோட்ரோம் போஸ்ட் (Civil Aerodrome Post)
சின்னியம்பாளையம்
கோயம்புத்தூர் 641062
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 12 கிமீ, சின்னியம்பாளையம் 2.6 கிமீ, கோயம்புத்தூர் விமான நிலையம் 3 கிமீ, சிங்காநல்லூர் 9 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 12 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் சிவில் ஏரோட்ரோம் போஸ்ட் (Civil Aerodrome Post) அருகில் உள்ள ஜி கே ஆர் நகரில் (G K R Nagar) மன மகிழ்ச்சி தந்தருளும் கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் கோவில் அமைந்துள்ளது. சின்னியம்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 2.6 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 12 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி அருள்கின்றார்.
கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம். கந்த சஷ்டி வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் மற்றும் சிவில் ஏரோட்ரோம் போஸ்ட் (Civil Aerodrome Post) ஜி கே ஆர் நகர் (G K R Nagar) வாழ் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பொருளுதவியுடன் ஜி கே ஆர் நகர் முருகன் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகன் கோவில் அழகிய சிற்பங்கள் உடைய திருக்கோவிலாகும் இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கையில் வேலுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, சிவபெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேத முருகன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி பெற்றிட, சங்கடங்கள் தீர, வினைகள் விலக, பிணிகள் அகல, நினைத்தது நடைபெற,திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, நல்லன அருள, தொழில் சிறக்க, நல்ல அதிர்வுகள் உண்டாக, தோஷங்கள் விலகிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் ஜி கே ஆர் நகர் முருகனை மனமுருக வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment