கோவில் 1507 - கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கோவில்கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1507
செல்வம் பெருக அருளும் கேரளா கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கோவில்
24.07.2025 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஓச்சிறை 690520 [Oachira]
[ஓச்சிரா]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் {Kerala]
இருப்பிடம்: கொல்லம் 56 கிமீ, காயம்குளம் 6 கிமீ, கருநாகப்பள்ளி 10 கிமீ, அடூர் 32 கிமீ, ஆலப்புழா 51 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 56 கிமீ தொலைவில் இருக்கும் ஓச்சிறை கிராமத்தில் செல்வம் பெருக அருளும் கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் காயம்குளத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளியிலிருந்து 10 கிமீ அல்லது அடூரிலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது ஆலப்புழாவிலிருந்து 51 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக திருக்காட்சி தந்து அருள்புரிகின்றார்.
கேரளா கொல்லம் மூலவர் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் [தைப்பூயம்] விசேஷ பூஜைகள், காவடி என சிறப்பாக ந்டைபெறுகின்றன. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி வட்டத்தில் ஓச்சிறை. சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டள்ளது. இக்கோவில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவர், சாஸ்தா உள்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, வினைகள் நீங்க, கேட்டது கிடைக்க, சந்தான பாக்கியம் வேண்டி, வாழ்வு சிறக்க, நல்லன அருள, தொழில் மேம்பட, அல்லல்கள் தீர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் நீங்க அருளும் கேரளா கொல்லம் ஓச்சிறை சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment