கோவில் 1483 - சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1483

திருமண வரமருளும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் கோவில்

30.06.2025 திங்கள்


அருள்மிகு திருமுருக சிவசண்முக பெருமான் திருக்கோவில் [TM000755]

ஈசானி மூர்த்தி கோவில் தெரு

திருவொற்றியூர்

சென்னை 600019


இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 11 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 58 கிமீ, பாரிமுனை 10 கிமீ, சென்னை எழும்பூர் 13 கிமீ, பெரம்பூர் 15 கிமீ, மாதவரம் 16 கிமீ, தி. நகர் 18 கிமீ, கோயம்பேடு 21 கிமீ


மூலவர்: திருமுருக சிவசண்முக பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: திருமுருக சிவசண்முக பெருமான் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் தெருவில் திருமண வரமருளும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் கோவிலை அடையலாம். மூலவர் திருமுருக சிவசண்முக பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக இத்திருக்கோவிலில் அருளாட்சி செய்கின்றார்.


சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் கோவிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி திருவிழா முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கின்றனர். தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்கள், லட்சார்ச்சனை, விசேஷ தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் நாள் மாலை சத்ரு சம்ஹார பூஜை நடப்பது சிறப்பு. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. 7-ம் நாள் திருமுருக சிவசண்முக பெருமானுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருமணம் நடைபெறும். அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறும். மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். இக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.

தல அமைப்பு:

சென்னை திருமுருக சிவசண்முக பெருமான் திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருக சிவசண்முக பெருமான் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

திருமண வரமருள, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, வினைகள் அகல, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் கிட்ட, நல்லன நடைபெற, மன அமைதி கிடைக்க, சஞ்சலங்கள் தீர, தொழில், வியாபாரம் சிறக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 8.30-11 மாலை 5-8


நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான் திருப்பாதங்கள் வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1483 திருமண வரமருளும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான்


படம் 2 - 1483 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் சென்னை திருவொற்றியூர் திருமுருக சிவசண்முக பெருமான்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்