கோவில் 1391 - சேலம் நடுவலூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1391
மன சஞ்சலங்களை நீக்கியருளும் சேலம் நடுவலூர் முருகன் கோவில்
30.03.2025 ஞாயிறு
அருள்மிகு முருகன் திருக்கோவில்
நடுவலூர் 636105
கெங்கவல்லி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 84 கிமீ, கெங்கவல்லி 14 கிமீ, ஆத்தூர் 23 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 41 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 45 கிமீ, வாழப்பாடி 53 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 84 கிமீ தொலைவில் இருக்கும் நடுவலூர் கிராமத்தில் மன சஞ்சலங்களை நீக்கியருளும் நடுவலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கெங்கவல்லி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற 146 அடி உயர ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் நடுவலூர் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் அருளாட்சி செய்கின்றார்.
சேலம் நடுவலூர் முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
தல அமைப்பு:
சேலம் நடுவலூர் முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன சஞ்சலங்கள் நீங்க, எண்ணங்கள் ஈடேற, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, மன அமைதி கிட்ட, தொழில் மேம்பட, விவசாயாம் சிறக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, நல்லன நடக்க, எடுத்த காரியங்களில் வெற்றியடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணங்கள் ஈடேற அருளும் சேலம் நடுவலூர் முருகனை தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1391 மன சஞ்சலங்களை நீக்கியருளும் சேலம் நடுவலூர் முருகன்
Comments
Post a Comment