கோவில் 1390 - சேலம் கெங்கவல்லி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1390

வாழ்வில் ஏற்றம் தரும் சேலம் கெங்கவல்லி முருகன் கோவில்

29.03.2025 சனி


அருள்மிகு முருகன் திருக்கோவில்

கெங்கவல்லி 636105

கெங்கவல்லி வட்டம்

சேலம் மாவட்டம்


இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 71 கிமீ, கெங்கவல்லி 1 கிமீ, ஆத்தூர் 14 கிமீ, தலைவாசல் 28 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 28 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 32 கிமீ, வாழப்பாடி 39 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 71 கிமீ தொலைவில் இருக்கும் கெங்கவல்லி நகரில் வாழ்வில் ஏற்றம் தரும் கெங்கவல்லி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கெங்கவல்லி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது தலைவாசல் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க 146 அடி உயர ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார்.


சேலம் கெங்கவல்லி முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. விளக்கு பூஜை, முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபோகம் ஏராளமான பக்தர்களுடன் சிறப்பாக ந்டக்கின்றன. திருவண்ணாமலை, துறையூா், திருமுதுகுன்றம் வீரசைவ சிம்மாசனாதிபதி 24-ம் பட்டத்து குருமகா சன்னிதானம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் நடைபெறுகின்றன. மார்கழி பூஜை சிறப்பாக நடக்கின்றது. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

திருவண்ணாமலை துறையூா் திருமுதுகுன்றம் ஆதீனத்துக்குள்பட்ட சேலம் கெங்கவல்லி முருகன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாகத் திகழ்கின்றது.


தல அமைப்பு:

சேலம் கெங்கவல்லி முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. உற்சவ மூர்த்திகள் பொலிவான திருத்தோற்றத்தில் காட்சியருள்கின்றனர். மேலும் விநாயகர், சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை முதலான பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, மார்கழி பூஜை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வாழ்வில் ஏற்றம் பெற, மங்கல வாழ்வு பெற்றிட, வினைகள் நீங்க, பிணிகள் அகல, மணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் சீராக, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிடைக்க, தொல்லைகள் தீர, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், விளக்குப்பூஜை


மங்கல வாழ்வு தந்தருளும் சேலம் கெங்கவல்லி முருகனை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1390 வாழ்வில் ஏற்றம் தரும் சேலம் கெங்கவல்லி முருகன்


படம் 2 - 1390 மங்கல வாழ்வு தந்தருளும் சேலம் கெங்கவல்லி முருகன்






Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்