கோவில் 1388 - சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1388
வாழ்வில் ஏற்றம் தரும் சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவில்
27.03.2025 வியாழன்
அருள்மிகு சிவசக்தி முருகன் திருக்கோவில்
கப்புத்தி R.F [Kapputhi RF]
ஏற்காடு 636601
ஏற்காடு வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 16 கிமீ, ஏற்காடு 35 கிமீ
மூலவர்: சிவசக்தி முருகன்
உற்சவர்: சிவசக்தி முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவில் இருக்கும் கப்புத்தி R.F பகுதியில் வாழ்வில் ஏற்றம் தரும் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சிவசக்தி முருகன் மூலவராக அருள்பாலிக்கின்றார். இப்பகுதிக்கு அருகில் கப்புத்தி நீர்வீழ்ச்சி/கல்லார் நீர்வீழ்ச்சி இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவில் இப்பகுதியில் முக்கியக் கோவிலாகக் கருதப்படுகிறது..
தல அமைப்பு:
சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் வேல் மற்றும் சேவற்கொடியுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் இடது திருக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்தும், வலது திருக்கரம் அபய முத்திரை காட்டியவாறே அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றம் பெற, வேண்டியது கிடைக்க, பிணிகள் நீங்க, ஞானம் சிறக்க, செல்வம் பெருக, விவசாயம் விருத்தியடைய, மன நிம்மதி கிடைக்க, நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டியதை தந்தருளும் சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகனை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1388 வாழ்வில் ஏற்றம் தரும் சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன்
படம் 2 - 1388 வேண்டியதை தந்தருளும் சேலம் ஏற்காடு கப்புத்தி R.F சிவசக்தி முருகன்
Comments
Post a Comment