கோவில் 1333 - சேலம் எடப்பாடி அரசிராமணி முருகன் கோவில்

🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1333

துன்பங்கள் நீக்கும் சேலம் எடப்பாடி அரசிராமணி முருகன் கோவில்

31.01.2025 வெள்ளி


அருள்மிகு முருகன் திருக்கோவில்

அரசிராமணி

எடப்பாடி 637101

எடப்பாடி வட்டம்

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 44 கிமீ, எடப்பாடி பே. நி. 2.5 கிமீ, சங்ககிரி 18 கிமீ, தாரமங்கலம் 25 கிமீ, மேட்டூர் 30 கிமீ, மேச்சேரி 36 கிமீ, ஒமலூர் 36 கிமீ

மூலவர்: முருகன்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவில் உள்ள எடப்பாடி நகரில் உள்ள அரசிராமணி பகுதியில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் எடப்பாடி அரசிராமணி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் 30 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது ஒமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசிராமணி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆற்றலுடன் அருள்புரிகின்றார்.


எடப்பாடி அரசிராமணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு காவடிகள் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ வழிபாடுகளுடன் நடக்கின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

எடப்பாடி நகரில் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பேருதவியுடன் நகரின் மையப் பகுதியில் அரசிராமணி முருகன் கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

எடப்பாடி அரசிராமணி முருகன் கோவில் கருவறையில் மூலவராக முருகன் கையில் தண்டம் ஏந்தி மற்றும் வேல், சேவற்கொடி கொண்டு திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இடது கையை இடுப்பில் வைத்து அழகிய திருக்கோலத்தில் அருள்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. உற்சவர் முருகப்பெருமான் அழகிய் திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், சிவபெருமான் மற்றும் பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

துன்பங்கள் நீங்க, விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் போக்க, வினைகள் அகல, மன நிம்மதி பெற, குழந்தைப்பேறு கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, தீய எண்ணங்கள் அழிய, செல்வம் பெருக, விவசாயம் விருத்தியடைய, தொழில் மேம்பட


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் சேலம் எடப்பாடி அரசிராமணி முருகன் திருவடியை பற்றி தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1333 துன்பங்கள் நீக்கும் சேலம் எடப்பாடி அரசிராமணி முருகன்


படம் 2 - 1333 விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் சேலம் எடப்பாடி அரசிராமணி முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்