கோவில் 1329 - சேலம் ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1329
நல்வாழ்வு அருளும் சேலம் ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
27.01.2025 திங்கள்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM008508]
ஒட்டப்பட்டி 636109
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 48 கிமீ, ஆத்தூர் 12 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 13 கிமீ, வாழப்படி 17 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 9 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
பழமை: மிகவும் பழமையானது.
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் நல்வாழ்வு அருளும் ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது வாழப்படி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் போற்றும் ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 9 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சேலம் ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார்
ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமான் திருவிழாக்கள் கோலமாக நடைபெறுகின்றது.
தல வரலாறு:
மிகவும் பழமையான இக்கோவில் தற்போது இந்து அறநிலைய துறையினர் மூலம் நிர்வகிக்கபடுகின்றது.
தல அமைப்பு:
மிகவும் பழமையான தொருக்கோவில் கருவறையில் மூலவராக பாலசுப்பிரமணிய சுவாமி அழகுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நல்வாழ்வு அருள, சஞ்சலங்கள் தீர, கல்வி சிறக்க, திருமணம், குழந்தை வேண்டி, பிணிகள் நீங்க, உடல் நலன் வேண்டி, செல்வம் பெருக, பிரச்சினைகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-8 மாலை 5.30-7
சஞ்சலங்கள் தீர அருளும் சேலம் ஒட்டப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமியை தினமும் தொழுது பயனடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment