கோவில் 1328 - சேலம் புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1328
அல்லல்கள் அகற்றும் சேலம் புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில்
26.01.2025 ஞாயிறு
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் [TM008705]
புதுச்சாம்பள்ளி 636403
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 63 கிமீ, மேட்டூர் 33 கிமீ, ஓமலூர் 50 கிமீ, தாரமங்கலம் 52 கிமீ
மூலவர்: முத்துக்குமார சுவாமி
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் அல்லல்கள் அகற்றும் புதுசாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி அருள்புரிகின்றார்
புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முத்துக்குமார சுவாமியை வழிபட்டு, நற்பலன்கள் பெற்றுச் செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
இந்து அறநிலைய துறையினர் மூலம் நிர்வகிக்கபடுகின்ற. புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகின்றது.
தல அமைப்பு:
புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில் கருவறையில் மூலவராக முத்துக்குமார சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
அல்லல்கள் அகல, கேட்டது கிடைக்க, திருமண வரம் வேண்டி, சந்தான பாக்கியம் கிட்ட, வினைகள் நீங்க, பிணிகள் விலக, நோய்கள் தீர, மன மகிழ்ச்சி உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டவை எல்லாம் தந்தருளும் சேலம் புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1328 அல்லல்கள் அகற்றும் சேலம் புதுச்சாம்பள்ளி முத்துக்குமார சுவாமி கோவில்
Comments
Post a Comment